ஒரு வேளை உணவிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்களைச் சந்தித்து வாழ்க்கைப் பாடம் கற்க அனுப்பி வைத்தோம்.
பிறந்த நாளில் கேக்கினை முகத்தில் விசிறியடித்து அஜீரணங்களில் திகைத்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினுக்கு சக மனித ஜீவன் பசித்திருப்பது விநோதமாகப் பட்டது.
திரை மறைவில் இருக்கும் சமூக அவலங்களை ……அவைகளை நீக்க தன்னை சரியாக உருவமைக்க வேண்டிய கட்டாயத்தை முறையாக எடுத்துரைத்தால் இளைய சமுதாயம் நன்றாகவே புரிந்து கொள்கிறது.
உற்பத்தி செய்ய இயலாவிடினும் பரவாயில்லை….வீணடிக்க மாட்டோம் மேம்
என்றனர் மாணவர்கள்…..
நம்பிக்கை துளிர்க்கிறது…..







